செய்திகள் இந்தியா
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
பாட்னா:
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் அனுகல்ப் மிஸ்ரா மற்றும் அவரது மைத்துனர் லவகுஷ் மிஸ்ராவும் ஆகியோரும் அடக்கம்.
இதில் அனுகல்ப் மிஸ்ராவும், டின்னு யாதவும் தான் உண்டியல் பணம் திருடுவதில் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அனுகல்ப் வீட்டில் சோதனை நடத்தியபோது அவர் ஊருக்கு வெளியில் பிரமாண்டமாக பண்ணை வீடு ஒன்றை கட்டி இருந்தது தெரிய வந்துள்ளது.
அதோடு அனுகல்ப் சொந்தமாக ஸ்கார்பியோ கார் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். அவர் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 8 பேரின் சொத்து, வங்கி கணக்கு ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்
June 25, 2026, 12:01 pm
