செய்திகள் இந்தியா
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
புது டெல்லி:
பெங்களூரிலிருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதாகச் சந்தேகம் எழுந்ததால் பரபரப்பு உண்டானது.
டில்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் 171 பயணிகள் இருந்தனர்.
விமானம் டில்லியில் தரையிறங்கும்போது இயந்திரத்தில் தீ என்று விமானிகளுக்கு எச்சரிக்கை கிடைத்தது.
சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
சோழர் காலத்துச் செப்புத் தகடுகளைத் திரும்பப் பெற்ற இந்தியா
May 15, 2026, 11:29 am
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 14, 2026, 3:16 pm
