நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா

புது டெல்லி:

பெங்களூரிலிருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதாகச் சந்தேகம் எழுந்ததால் பரபரப்பு உண்டானது.

டில்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம் டில்லியில் தரையிறங்கும்போது இயந்திரத்தில் தீ என்று விமானிகளுக்கு எச்சரிக்கை கிடைத்தது.

சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset