நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2018க்கு முன்னர் இஸ்லாமிற்கு மதம் மாறிய குழந்தைகளுக்கு இந்திரா காந்தியின் தீர்ப்பு பொருந்தாது: மலாக்கா உயர் நீதிமன்றம்

மலாக்கா: 

கடந்த  2018ஆம் ஆண்டின் இந்திரா காந்தியின் தீர்ப்பு, அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஒருதலைப்பட்ச மதமாற்றங்களுக்குப் பொருந்தாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து, குழந்தையாக இருந்தபோது இஸ்லாமிற்கு மதம் மாறியதை ரத்து செய்யக் கோரி இந்திரா காந்தி தாக்கல் செய்த மனுவை மலாக்கா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திரா காந்திக்கு எதிராக பேரா இஸ்லாமிய மதத் துறை இயக்குநர், பிறர் வழக்கில் கூட்டாட்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மதமாற்றத்தை ரத்து செய்ய முடியுமா என்பதே இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினை என்று நீதித்துறை ஆணையர் எஸ். ராஜா சேகரன் கூறினார்.

இந்திரா காந்தி வழக்கில், கூட்டரசு அரசியலமைப்பின் 12(4) பிரிவை மீறுவதால், ஒரு பெற்றோரின் சம்மதத்துடன் மட்டும் ஒரு சிறுவரை இஸ்லாமிற்கு மதம் மாற்றுவது செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை வாசித்த அப்போதைய கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஜைனூன் அலி, சட்டப்பிரிவு 12(4)-ல் உள்ள 'பெற்றோர்' என்ற வார்த்தை, குழந்தை மீது சட்டப்பூர்வ உரிமைகள் இருக்கும் வரை, இரு பெற்றோர்களையும் குறிப்பதாகவே பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

இருப்பினும், இந்திரா காந்தி தீர்ப்பு இனிவரும் காலங்களில் மட்டுமே அமலில் இருக்கும் என்று தெளிவாகக் கூறியதாக ராஜசேகரன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset