செய்திகள் இந்தியா
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்
புது டெல்லி:
இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடகை கட்டணங்களை உயர்த்தக் கோரி, டெல்லியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை இந்த வாரத்தில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் லிட்டருக்கு 90 பைசா உயர்த்தப்பட்டது.
4 நாட்கள் இடைவெளியில் நிகழ்ந்த இரண்டாவது விலை உயர்வு இதுவாகும். மேலும், டெல்லியில் பெரும்பாலான டாக்ஸிகள், ஆட்டோக்களில் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி-யின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்தக் கடும் விலை உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
