நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சோழர் காலத்துச் செப்புத் தகடுகளைத் திரும்பப் பெற்ற இந்தியா

ஆம்ஸ்டர்டாம்:

நெதர்லந்திடமிருந்து சோழர் காலத்துச் செப்புத் தகடுகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லந்து வருகையின் போது அவரிடம் அந்தத் தகடுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. 

21 பெரிய தகடுகள், 3 சிறிய தகடுகள். 

ராஜேந்திர சோழன் தம் தந்தை ராஜராஜ சோழனுக்கு அளித்த வாக்குறுதியைப் பற்றித் தகடுகளில் எழுதப்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி தமது முகநூலில் பதிவில் குறிப்பிட்டார்.

சோழர்களின் கலாசாரமும் கடல்துறை பலமும் இந்தியாவுக்குப் பெருமையளிப்பதாகத் மோடி கூறினார்.

19ஆம் நூற்றாண்டிலிருந்து அந்தத் தகடுகள் நெதர்லந்தின் லைடன் (Leiden) பல்கலைக்கழகத்தில் இருந்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset