செய்திகள் இந்தியா
சத்தீஸ்கரில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300க்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1000க்கு மட்டுமே பெட்ரோல் வழங்க உத்தரவு
ராய்ப்பூர்:
சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்தி காரணமாக மக்கள் பதற்றத்தில் அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி குவிப்பதை காண முடிந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்ட ஆட்சியர் பகவான் சிங் உய்கே நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘எரிபொருள் இருப்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300-க்கு அதிகமாகவும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-க்கு அதிகமாகவும் பெட்ரோல் வழங்கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரல்கள், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்கக் கூடாது.
அதேநேரம் ஆம்புலன்ஸ்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ103.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
