நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சத்தீஸ்கரில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300க்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1000க்கு மட்டுமே பெட்ரோல் வழங்க உத்தரவு

ராய்ப்பூர்: 

சத்​தீஸ்​கரின் பல மாவட்​டங்​களில் எரிபொருள் தட்​டுப்​பாடு தொடர்​பான வதந்தி காரண​மாக மக்​கள் பதற்​றத்​தில் அதி​கள​வில் பெட்​ரோல், டீசலை வாங்கி குவிப்​பதை காண முடிந்​த​தாக மாநில அரசு தெரி​வித்​துள்​ளது.

இந்நிலையில், சத்​தீஸ்​கரின் கரி​யாபந்த் மாவட்ட ஆட்​சி​யர் பகவான் சிங் உய்கே நேற்று முன்​தினம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து பெட்​ரோல் நிலை​யங்​களுக்​கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

அதில், ‘‘எரிபொருள் இருப்பு நிலைமை கட்​டுக்​குள் கொண்டு வரப்​படும் வரை, இரு சக்கர வாக​னங்​களுக்கு ரூ.300-க்கு அதி​க​மாக​வும் 4 சக்கர வாக​னங்​களுக்கு ரூ.1,000-க்கு அதி​க​மாக​வும் பெட்​ரோல் வழங்​கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரல்​கள், பாட்​டில்​களில் பெட்​ரோல், டீசல் விற்​கக் கூடாது. 

அதேநேரம் ஆம்​புலன்​ஸ்​கள் போன்ற அத்​தி​யா​வசிய சேவை​களில் ஈடு​பட்​டுள்ள வாக​னங்​களுக்கு பெட்​ரோல், டீசல் விநி​யோகத்​தில் முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும்’’ என்று கூறி​யுள்​ளார்.

அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ103.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset