நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லக்னோ:

இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியில் வீசிய புழுதிப் புயலில், ஒரு திருமண மண்டபத்தின் மேற்கூரையோடு சேர்த்து தொழிலாளி ஒருவர் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.

அந்தப் புழுதிப் புய​லால் 117 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

வடஇந்​திய மாநிலங்​களில் கோடை காலத்​தில் நிலங்​கள் வறண்டு விடு​கின்​றன. இதனால் மண் பொடி​யாக மாறி காற்​றில் கலக்​கிறது. அதிக வெப்​பத்​தால் வலு​வான குறைந்த காற்​றழுத்த மண்​டலம் உரு​வாகிறது. 

இதுபோன்ற காரணங்​களால் வடஇந்​திய மாநிலங்​களில் மே, ஜூன் கோடை காலத்​தில் புழு​திப் புயல்​கள் உரு​வாகின்​றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் வீசக்​கூடும் என்று சில நாட்​களுக்கு முன்பே வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாலை​யில் உத்தர பிரதேசத்திலும் அண்டை மாநிலங்​களிலும் புழுதிப் புயல் வீசி​யது. உத்தர பிரதேசத்​தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்​தில் புழுதிப் புயல் வீசி​யது. பல்​வேறு இடங்​களில் இடி, மின்​னலுடன் பலத்த மழை​யும் பெய்​தது. புழுதிப் புய​லால் பிர​யாக்​ராஜ், பதோஹி, மிர்​சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர்.

பரேலி பகுதியை சேர்ந்த தொழிலாளி நான்கி மியான் (50). இவர் 13-ம் தேதி மாலை அங்குள்ள திருமண மண்டபத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.

திருமண மண்டப மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் இரும்புக் கம்பியை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், காற்றின் வேகத்தால் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அதோடு தொழிலாளி நான்கி மியானும் சுமார் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset