செய்திகள் இந்தியா
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லக்னோ:
இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியில் வீசிய புழுதிப் புயலில், ஒரு திருமண மண்டபத்தின் மேற்கூரையோடு சேர்த்து தொழிலாளி ஒருவர் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.
அந்தப் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில் கலக்கிறது. அதிக வெப்பத்தால் வலுவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது.
இதுபோன்ற காரணங்களால் வடஇந்திய மாநிலங்களில் மே, ஜூன் கோடை காலத்தில் புழுதிப் புயல்கள் உருவாகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்பே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாலையில் உத்தர பிரதேசத்திலும் அண்டை மாநிலங்களிலும் புழுதிப் புயல் வீசியது. உத்தர பிரதேசத்தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயலால் பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பரேலி பகுதியை சேர்ந்த தொழிலாளி நான்கி மியான் (50). இவர் 13-ம் தேதி மாலை அங்குள்ள திருமண மண்டபத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.
திருமண மண்டப மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் இரும்புக் கம்பியை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், காற்றின் வேகத்தால் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அதோடு தொழிலாளி நான்கி மியானும் சுமார் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 3:16 pm
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
May 14, 2026, 10:48 am
இந்தியாவின் மணிப்பூரில் இன வன்முறையில் மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்தனர்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
