செய்திகள் இந்தியா
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
ஹைதராபாத்:
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி எச்சரித்துள்ளாா்.
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் பிரதமரின் இக்கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா், ரூ.9,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசியதாவது: இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இப்பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தினால், அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், போரின் தாக்கங்களையும் குறைக்க முடியும்.
அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதை ஓராண்டு நிறுத்திவைக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
உலக அளவில் பெட்ரோல்-டீசல் விலை அதிக அளவு உயா்ந்துள்ளது. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். கரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிவது, காணொலி வழியில் கூட்டங்களை நடத்துவது போன்ற வழக்கத்துக்கு நாம் அனைவரும் பழகினோம். இந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கி, அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது தற்போது மிகவும் அவசியம்.
பெட்ரோல்-டீசலை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம், அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.
மேற்கு ஆசிய போா் காரணமாக பெட்ரோல், உரங்களின் விலை உயா்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு சாத்தியமான எந்தவொரு வழியிலும் நாம் அந்நிய செலாவணியை சேமித்தாக வேண்டும்.
முன்பு 100 சதவீத எல்பிஜி பரவலாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தியது. இப்போது குழாய் வழி எரிவாயு (பிஎன்ஜி) விநியோகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. சூரிய மின் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளில் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றாா் அவா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்
May 6, 2026, 11:03 am
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
May 4, 2026, 4:01 pm
மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது
April 30, 2026, 5:52 pm
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
April 30, 2026, 5:33 pm
