செய்திகள் மலேசியா
மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்
கோலாலம்பூர்:
அமலில் உள்ள மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்பதை அரசு உறுதியளிக்கிறது.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் இதனை வலியுறுத்தினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி உலகளாவிய எரிசக்தி சந்தையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் எரிபொருள் மானிய உத்தரவாதங்கள் தொடர்பான கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என அரசு உறுதியளித்துள்ளது.
அரசாங்கம் எடுத்துள்ள இந்த அணுகுமுறை, அவசர முடிவுகளின் அடிப்படையில் அல்லாமல், விரிவான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மேற்கு ஆசிய மோதலின் சவால்களை அரசு அறிந்திருந்தாலும், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பான்மையான மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
ஹோர்முஸ் நீரிணை மூடல் அனைத்து ஆசியான் நாடுகளையும் பாதிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
April 21, 2026, 1:02 pm
