நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் அதிகாரிகள் ஒருவரின் தலையில் மிதிக்கும் காணொளி; அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்: டத்தோஶ்ரீ சைபுடின்

கோலாலம்பூர்:

கெடா கூலிம் நகரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடைக்கு முன் ஒருவரை போலிஸ் அதிகாரிகள் தலையில்  ஆக்ரோஷமாக மிதிக்கும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து  பொதுமக்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியன் இஸ்மாயில் நினைவூட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்க இருந்தனவா அல்லது நேர்மையின் தெளிவான மீறலாக இருந்தனவா என்பதை ஆராயப்படும்.

மேலும் ஒரு அவசர விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கெடா போலிஸ் தலைவரை அழைத்தேன்.

போலிஸ் அதிகாரிகளின் எந்தவொரு அமலாக்க நடவடிக்கையும், தற்போதுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு  உட்பட்டது மற்றும் அனைத்து உறுப்பினர்களாலும் புரிந்து கொள்ளப்பட்டதாகும்.

ஆக முழுமையான விசாரணைக்கு பின் இவ்விவகாரத்திற்கு பதில் கிடைக்கும்.

ஆக அதுவரை  மக்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset