செய்திகள் மலேசியா
போதைப் பொருள் விற்பனையின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது: டத்தோ ஹுசைன் ஒமார் கான்
கோலாலம்பூர்:
போதைப் பொருள் விற்பனையின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
பணத்தை சலவை செய்வதற்காக அந்நிய செலாவணி பரிமாற்ற வணிகம் என்ற போர்வையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏப்ரல் 16ஆம் தேதி 19 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் முறியடிக்கப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில் 24 முதல் 48 வயதுக்குட்பட்ட 12 உள்ளூர் ஆண்கள், ஏழு பெண்கள், ஐந்து உள்ளூர் மக்கள், இரண்டு சீனக் குடிமக்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து 4.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு நாணயங்களில் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இங்குள்ள தாமான் வாயூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனையின் விளைவாக, 0.89 கிலோ கிராம் எடையுள்ள எக்ஸ்டஸி மாத்திரைகள், கெட்டமைன் (0.69 கி.கி), எரிமின் 5 (0.46 கி.கி), எம்.டி.எம்.ஏ தூள் (6.5 கி.கி) உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களும், போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர், கெப்போங்கைச் சுற்றி மேலும் பல சோதனைகள் நடத்தப்பட்டு, மற்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
