நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலை ஆற்றல், சக்தியுடன் எதிர்கொள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி தயாராகி வருகிறது: டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை ஆற்றல், சக்தியுடன் எதிர்கொள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி தயாராகி வருகிறது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இதன் அடிப்படையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சிறப்பு ஒன்றுக்கூடல் அண்மையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் PACABA பணிகளை கட்சியை தொடங்கியுள்ளது.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில்  இதற்கான கூட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

அடுத்த பொதுத் தேர்தலை உண்மையாகவே தயாரான, ஒழுங்கமைக்கப்பட்ட, போட்டித்தன்மை வாய்ந்த ஒரு அரசியல் சக்தியாக உருவெடுப்பதை உறுதி செய்வதே  இக்கூட்டங்களின் தற்போதைய தெளிவான நோக்கமாகும்.

ஆக இக்கூட்டங்களை தொடர்ந்து 16ஆவது பொதுத் தேர்தலை ஆற்றல், சக்தியுடன் கட்சி எதிர்கொள்ளும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset