நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் அனைத்து சமூக மக்களையும் சென்றடைய வேண்டும்: ரவீன்குமார்

ஜொகூர்பாரு -
ஜொகூர் மாநில அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் அனைத்து சமூக மக்களையும் சென்றடைய வேண்டும்.

ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணமூர்த்தி இதனை கூறினார்.

தெலுங்கு சமூகத்தினருக்கும் மாநில அரசுக்கும்  இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, தெலுங்கு சங்கத்துடன் நடைபெற்ற ஒரு சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஜொகூரின் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தலைமையின் கீழ், ஜொகூர் மாநில அரசின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பகிர்ந்துகொள்வதற்கு இந்த சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ள ஒரு தளமாக அமைந்தது.

அதே நேரத்தில், மாநிலத்தில் உள்ள தெலுங்கு சமூகத்தினரின் தேவைகளையும் விருப்பங்களையும் நாங்கள் நன்கு புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பையும் இது ஏற்படுத்தியது.

இங்கு நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் மூலம், பல்வேறு கருத்துக்களும் ஆலோசனைகளும் வெளிப்படையாகப் பகிரப்பட்டன.

ஒவ்வொருவரின் குரலும் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கும், அதன் மூலம் ஜொகூரில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துவதற்கும் இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று ரவீன்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset