செய்திகள் மலேசியா
சுங்கை நிபோங் விரைவுச்சாலை நாளை திங்கட்கிழமை நான்கு மணி நேரம் மூடப்படும்
ஜார்ஜ்டவுன்:
கிறிஸ்டல் பாயின்ட் எதிரே உள்ள சுங்கை நிபோங் விரைவுச்சாலை, இந்த திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நான்கு மணி நேரம் முழுமையாக மூடப்படும்.
அந்தப் பாதையில் ஜாம்பத்தான் கெடுவா எஸ்டி பிஹெச்டிக்காக புதிய வேரியபிள் மெசேஜ் சைனேஜ்/எல்இடி போர்டை அகற்றுவதற்கும் நிறுவுவதற்குமான வேலைக்கு இடமளிக்கும் வகையில், இந்த மூடல் செய்யப்படுவதாகப் பினாங்கு பொதுப்பணித் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"புக்கிட் ஜம்புல் வட்டத்திலிருந்து குயின்ஸ்பே நோக்கிய திசையை நோக்கி சுங்கை நிபோங் விரைவுச்சாலையின் முழுவதுமாக மூடப்படும்.
"அதன்படி, சாலைப் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வாகனங்களை மெதுவாகச் செலுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பாதுகாப்பு அறிகுறிகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று நேற்றைய அறிக்கை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், குறிப்பாக சாலைப் பயனர்கள், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், தங்கள் பயணங்களை சிறப்பாகத் திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
ஹோர்முஸ் நீரிணை மூடல் அனைத்து ஆசியான் நாடுகளையும் பாதிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
April 21, 2026, 1:02 pm
14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
April 21, 2026, 1:01 pm
மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்
April 21, 2026, 12:21 pm
“நீர்த் தட்டுப்பாடு வருமா?”: மீரி மக்களின் அச்சத்தைப் போக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
April 21, 2026, 12:09 pm
