செய்திகள் மலேசியா
பணியில் இருந்தபோது கூர்மையான ஆயுதங்களுடன் வந்த சந்தேக நபர்களால் போலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்
மலாக்கா:
பணியில் இருந்தபோது கூர்மையான ஆயுதங்களுடன் வந்த சந்தேக நபர்களால் போலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்.
மலாக்கா மத்திய மாவட்ட போலிஸ் தலைவர் கிறிஸ்டோபர் பதிட் இதனை கூறினார்.
பணியில் இருந்த போலிஸ் அதிகாரிகள் மீதான மற்றுமொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மலாக்கா தஞ்சோங் கிளிங்கில் நடந்த போதைப்பொருள் சோதனையின் போது, ஒரு நபர் அரிவாளால் அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்.
இந்த சமீபத்திய சம்பவம் ஏப்ரல் 9 அன்று கோலா லங்காட்டில் வைரலான சம்பவத்தை நினைவூட்டுகிறது.
அப்போது, ஒரு கடல் உணவு விடுதியில், ஒரு நபர் கசாப்புக் கத்தியைப் பயன்படுத்தி போலிஸ் அதிகாரிகளைத் துரத்தி, பின்னர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், மலாக்கா போலிஸ் பிரிவுத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் தஞ்சங் கிளிங் பகுதியில் சோதனை நடத்தப்பட்டபோது, ஒருசந்தேக நபர் திடீரென ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
31 வயதான அந்த சந்தேக நபர், தப்பி ஓடுவதற்கு முன்பு அதிகாரிகளை மிரட்டி, ஒரு நீண்ட அரிவாளால் தாக்கினார்.
ஆனால் பின்னர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்
April 15, 2026, 12:28 pm
ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்
April 15, 2026, 11:32 am
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்
April 15, 2026, 10:32 am
அந்தமான் கடலில் பயங்கரம்: 250-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
April 15, 2026, 10:08 am
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அதிரடி திட்டம்: 2 லட்சம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர்
April 15, 2026, 9:52 am
