நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணியில் இருந்தபோது கூர்மையான ஆயுதங்களுடன் வந்த சந்தேக நபர்களால் போலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்

மலாக்கா:

பணியில் இருந்தபோது கூர்மையான ஆயுதங்களுடன் வந்த சந்தேக நபர்களால்  போலிஸ் அதிகாரி ஒருவர்  தாக்கப்பட்டார்.

மலாக்கா மத்திய மாவட்ட போலிஸ் தலைவர் கிறிஸ்டோபர் பதிட் இதனை கூறினார்.

பணியில் இருந்த போலிஸ் அதிகாரிகள் மீதான மற்றுமொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மலாக்கா தஞ்சோங் கிளிங்கில் நடந்த போதைப்பொருள் சோதனையின் போது, ​ ஒரு நபர் அரிவாளால் அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்.

இந்த சமீபத்திய சம்பவம் ஏப்ரல் 9 அன்று கோலா லங்காட்டில் வைரலான சம்பவத்தை நினைவூட்டுகிறது. 

அப்போது, ​​ஒரு கடல் உணவு விடுதியில், ஒரு நபர் கசாப்புக் கத்தியைப் பயன்படுத்தி போலிஸ் அதிகாரிகளைத் துரத்தி, பின்னர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், மலாக்கா போலிஸ் பிரிவுத் தலைமையகத்தின்  போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

போதைப்பொருள் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் தஞ்சங் கிளிங் பகுதியில் சோதனை நடத்தப்பட்டபோது, ​​ஒருசந்தேக நபர் திடீரென ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

31 வயதான அந்த சந்தேக நபர், தப்பி ஓடுவதற்கு முன்பு அதிகாரிகளை மிரட்டி, ஒரு நீண்ட அரிவாளால் தாக்கினார்.

ஆனால் பின்னர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset