நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்

கோலா திரங்கானு: 

நேற்றிரவு இங்குள்ள சுல்தான் மஹ்மூத் விமான நிலையத்தின் வேலிக்கு வெளியே, தாங்கள் வழங்கிய ராயா பணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பெற்றுக் கொண்டதில் இரண்டு சகோதரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

10 வயதான ஏஷா கதீஜா அனுவார், அவரது 8 வயது சகோதரர் உவைஸ் அல் கர்னி, விமானத்தின் படிக்கட்டுகளில் ஏற முயன்ற நாட்டுத் தலைவர், அவர்களை நோக்கி ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் அடைந்ததாகக் கூறினர்.

ஏஷா கதீஜா, தனது பள்ளிச் செலவுகளுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்ட ஒரு உறையை அன்வரிடம் கொடுக்க முடிந்ததாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

"எங்களது தாய் லிசா ஃபாட்ஸிலா அப்துல் ஹமீத் (49) எங்களுடன் வந்தார். சிம்பாங் தோக்கு முதல் விமான நிலையம் வரை போலிஸ் வாகனத்தைப் பின்தொடர்ந்து, பிரதமரை நேரில் பார்க்க சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.

"இரவு 9 மணியளவில், கம்போங் சிம்பாங் தோக்குவில் நடைபெற்ற இக்ரா வகுப்பைத் தொடர்ந்து வீடு திரும்பும் போது, பிரதமரின் பிரதிநிதிகள் குழுவை நாங்கள் சந்தித்தோம்" என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர், அந்த இரண்டு சகோதரர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், அன்வரின் சார்பில் கூட்டரசு மேம்பாட்டுத் துறையின் (JPP) இயக்குநர் டத்துக் அப்துல் கஹார் அப்துல் ஹமீத், ஏஷா கதீஜா, உவைஸ் அல் கர்னியைச் சந்தித்தார்.

பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், அன்வர் அந்த இரண்டு சகோதரர்களுக்கும் ஒரு டேப்லெட், ஒரு இக்ரா புத்தகம், ரொக்கப் பணம், பள்ளிப் பை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

நேற்றிரவு தனது சமூக ஊடகப் பக்கத்தில், அந்த இரண்டு சகோதரர்களிடமிருந்தும் ராயா பணத்தைப் பெற்ற தருணத்தையும் அன்வர் பதிவேற்றம் செய்தார்.

அந்தச் சுருக்கமான பதிவில், நீண்ட காலத்திற்குப் பிறகு ராயா பணத்தைப் பெற்றதாகவும், ஏஷா கதீஜா, உவைஸ் அல் கர்னி காட்டிய அன்பு தம்மை மிகவும் நெகிழச் செய்ததாகவும் அன்வர் கூறினார்.

மேலும், கெரோப்போக் லெகோர் பரிசை வழங்கவும், புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் அலுவலகத்தைப் பார்வையிடவும் தான் விரும்புவதாக ஏஷா கதீஜா தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset