நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏப்ரல் 15 முதல் கேடிஎம்பி பயணிகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

நாளை ஏப்ரல் 15 முதல், வார நாட்களில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கேடிஎம்பி டிக்கெட்டுகளில் 30% தள்ளுபடியைப் பெறலாம்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தத் தள்ளுபடி, அனைத்து மின்சார ரயில் சேவை (ETS) பிரிவுகளுக்கும், அத்துடன் ஜொகூர் சென்ட்ரல் முதல் தும்பாட் வரையிலான வழித்தடத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் ரக்யாட் திமுரான் (ERT) சேவைக்கும் பொருந்தும்.

இந்த முன்னெடுப்பு திங்கள் முதல் வியாழன் வரையிலான பயணங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் வசதியான, பாதுகாப்பான, திறமையான ரயில் சேவையை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு, கே.டி.எம்.பி வழியாக மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

மலேசியர்களுக்கு ரயில் பயணத்தை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இது பயணச் செலவுகளைக் குறைக்கவும், பொதுமக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கவும், மேலும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து அமைப்புக்கான நாட்டின் செயல்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் உதவும்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset