செய்திகள் மலேசியா
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
சைபர்ஜெயா:
நான்கு உயர் மதிப்பு ஓவியங்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, புத்ராஜயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதனை அறிவித்துள்ளது.
உள்ளூர் அமலாக்க முகமைகள், அனைத்துலக மூலோபாய கூட்டாளிகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, 1 எம்டிபி நிதி முறைகேடு தொடர்பாக வெற்றிகரமாக மீட்கப்பட்ட சொத்துக்களில் இந்தக் கலைப்படைப்புகளும் அடங்கும் என்று எம்ஏசிசி இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கலைப்படைப்புகளின் மொத்த மதிப்பு சுமார் 786,556.25 மலேசிய ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் ஜோன் மிரோ – கம்போசிஷன் (1953); மாரிஸ் உட்ரிலோ – மெய்சன் டி ரெண்டெஸ்-வூ டி சாஸ் டி ஹென்றி IV, ரூ செயின்ட் வின்சென்ட், மான்ட்மார்ட்ரே (1934); பால்டஸ் – எட்யூட் போர் ஃபெம் கூஷே (1948) மற்றும் பாப்லோ பிக்காசோ – எல் எகுயேர் எட் லெஸ் க்ளவுன்ஸ் (1961) ஆகியவை அடங்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 9:36 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
