செய்திகள் மலேசியா
புகழ் பெற்ற இந்தியப் பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
கோலாலம்பூர்:
புகழ்பெற்ற இந்தியப் பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவு இசை உலகிற்கும் உலகளாவிய கலாச்சாரத்திற்கும் ஒரு பெரும் இழப்பு.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு வர்ணித்தார்.
இன்று முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவில், மறைந்தவர் தனது ஆயிரக்கணக்கான கலைப் படைப்புகள் மூலம் உணர்ச்சி, பாரம்பரியம், வரலாறு ஆகிய கூறுகளை வெற்றிகரமாக ஒன்றிணைத்த ஒரு அசாதாரணமான கலை ஆளுமை என்று அவர் குறிப்பிட்டார்.
தெற்காசியாவின் கலைப் பொக்கிஷங்களில் தங்கள் குடும்பத்தின் பெரும் பாரம்பரியத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்திய லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற முறையில் மறைந்தவரின் அந்தஸ்தையும் டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
காலத்தின் மாறிவரும் அலைகளுக்கு மத்தியிலும், தனக்கென ஒரு கலை அடையாளத்தை உருவாக்கி, தலைமுறைகளைக் கடந்து எப்போதும் பொருத்தமானவராக இருந்த மறைந்தவரின் துணிச்சலை அவர் பாராட்டினார்.
நாட்டின் சார்பாக பிரதமர் மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், இந்தத் துயரச் செய்தியால் பாதிக்கப்பட்ட அனைத்து கலை ஆர்வலர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
