செய்திகள் மலேசியா
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
சிங்கப்பூர் ஆண்டியப்பன் எழுதிய வாமனத் தீவு சிங்கப்பூரின் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களை இலக்கிய வடிவில் பதிவு செய்யும் தனிச்சிறப்பைக் கொண்ட நூல்.
தலைநகரில் அந்த நூலைத் தலைமையேற்று வெளியீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
திருமாலின் வாமன அவதாரம் எப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றதோ அதுபோல, சிறிய தீவாகத் தோன்றிய சிங்கப்பூர் உலக அரங்கில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்ற நாடாக வளர்ந்தது என்பதை வாமனத் தீவு என்ற தலைப்பே நமக்குப் புலப்படுத்துகிறது.
இந்த நூல் வரலாற்றுத் தகவல்களை மட்டும் வழங்கவில்லை, ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது.
சிறிய தீவாகத் தொடங்கிய சிங்கப்பூர், இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
மனித உழைப்பாலும் உறுதியாலும் தான். அந்த சிறப்பைத் தாங்கி நிற்கும் வாமனத் தீவு வெற்றி பெற வாழ்த்துகள் என்றூ டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
