நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கஞ்சா செடி பயரிடுவது குறித்த போலிப் படங்கள்: மாட் சாபுவின் அலுவலகம் எம்சிஎம்சியிடம் புகார்

புத்ராஜெயா:

விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் தனது அமைச்சர் முகமது சாபு அரசு ஊழியர்களை வீடுகளில் கஞ்சா செடி வளர்க்க ஊக்குவிப்பதாகக் கூறும் ஒரு தவறான புகைப்படம் தொடர்பாக எம்சிஎம்சியிடம் புகார் அளித்துள்ளது.

முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம், அந்த அறிக்கை அவதூறு தானது.

ஆக உண்மையற்ற தகவலை கொண்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கும் எம்சிஎம்சிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.

உண்மையான தகவல்களைப் பெற எப்போதும் அதிகாரப்பூர்வ வழிகளையே நாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset