செய்திகள் வணிகம்
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
புதுடெல்லி:
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவடைந்தது.
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 1,414 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 76,135 என்ற நிலையில் உள்ளது.
இதே போல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, சுமார் 407 புள்ளிகள் சரிவடைந்து 23,643 என்ற நிலையை எட்டியது. நிஃப்டியும் முந்தைய வர்த்தக நாளில் 24,050.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ்ஸும் நிஃப்டியும் கடுமையாக சரிவடைந்தது.
இதனால் டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
