செய்திகள் வணிகம்
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
புதுடெல்லி:
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவடைந்தது.
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 1,414 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 76,135 என்ற நிலையில் உள்ளது.
இதே போல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, சுமார் 407 புள்ளிகள் சரிவடைந்து 23,643 என்ற நிலையை எட்டியது. நிஃப்டியும் முந்தைய வர்த்தக நாளில் 24,050.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ்ஸும் நிஃப்டியும் கடுமையாக சரிவடைந்தது.
இதனால் டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
