செய்திகள் வணிகம்
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
சியோல்:
ஸ்டார்பக்ஸ் கொரியா (Starbucks Korea) நிறுவனம் அண்மையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய Tank Tumblers குவளைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சொன் ஜுங் ஹியுன் (Son Jung-hyun) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தென்கொரிய ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்களும் மாணவர்களும் 10 நாள்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பொதுமக்களில் 165 பேர் கொல்லப்பட்டனர்.
376 பேர் காயமடைந்து பிறகு மாண்டனர்.
அந்தச் சம்பவத்தின் 46ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் "Tank Day" என்ற பெயரில் புதிய குவளைகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவ வாகனங்களால் நசுக்கியதை "Tank Day" குறிப்பதாகக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதையடுத்து ஸ்டார்பக்ஸ் கொரியா, CEO வை நீக்கியதோடு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
