நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி

சியோல்:

ஸ்டார்பக்ஸ் கொரியா (Starbucks Korea) நிறுவனம் அண்மையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய Tank Tumblers குவளைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சொன் ஜுங் ஹியுன் (Son Jung-hyun) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

1980ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தென்கொரிய ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்களும் மாணவர்களும் 10 நாள்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் பொதுமக்களில் 165 பேர் கொல்லப்பட்டனர்.
376 பேர் காயமடைந்து பிறகு மாண்டனர்.

அந்தச் சம்பவத்தின் 46ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் "Tank Day" என்ற பெயரில் புதிய குவளைகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவ வாகனங்களால் நசுக்கியதை "Tank Day" குறிப்பதாகக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஸ்டார்பக்ஸ் கொரியா, CEO வை நீக்கியதோடு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset