செய்திகள் வணிகம்
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சொன்ன மோடியின் கருத்தால் இன்று மும்பை பங்கு சந்தை சரிந்தது
மும்பை:
தங்கம் வாங்குவதைக் குறைக்க மோடி வலியுறுத்திய நிலையில், இன்று காலை பங்குச் சந்தைகள் தொடங்கியதும் தங்க நகைகளின் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மற்ற இறக்குமதிகளைப் போல, இது தொழிற்துறை அல்லது உற்பத்திக்கான இறக்குமதியாக இல்லாததும் அந்நியச் செலாவணி கையிருப்பை நேரடியாக பாதிப்பதுமாக உள்ளது.
ஒருபக்கம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.15 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், எட்டாக்கனியாகிவிட்ட தங்கத்தை வாங்குகள் என்று சொன்னாலும் வாங்க முடியாத நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள். மற்றொருபக்கம் செல்வச்செழிப்பில் தங்கத்தை வாங்குவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர்கள் மோடியின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்களா என்ற கேள்வியும் உருவாகிறது.
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் பிரதமரின் கோரிக்கை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் - அமெரிக்க போர் காரணமாக, உலகளவில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறை போர் நிறுத்தம் உறுதி செய்யப்படாதபோதும், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது.
சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போது, இந்தியாவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும்போது அந்நியச் செலாவணி உயர்கிறது. போர்க் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், தங்கம் வாங்குவது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதிக்கிறது.
இவையெல்லாம் பொருளாதாரக் காரணிகள். ஆனால், தங்கம் வாங்குவது என்பது இந்திய நாட்டின் கலாசாரத்தில் ஊறிப்போயிருக்கும் விஷயம். திருமணத்துக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்றால், தங்கம் போடாமல் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா?
எத்தனையோ மாற்றங்கள் நிகழ்இந்த ஓராண்டில் தங்கம் வாங்காமல் இருந்துவிட்டு, அடுத்த ஆண்டு தங்கம் விலை இன்னமும் உயர்ந்தபிறகு வாங்கினால் அதற்கு மத்திய அரசு இழப்பீடு தருமா?
பெரும்பாலான மக்கள் வாங்குவது கிராம் முதல் சில சவரன்கள்தான். அவர்களது அவசிய மற்றும் அத்தியாவசியத் தேவைக்காகத்தான் வாங்குகிறார்கள். அதனை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறாரா பிரதமர் மோடி அல்லது கஜானாக்களில் வாங்கிக் குவிக்க கிலோவில் வாங்கும் பணக்காரர்களை சொல்கிறாரா? என்பதில்தான் விளக்கம் தேவைப்படுகிறது என்கிறார்கள் மக்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
