செய்திகள் வணிகம்
Starbucksஇல் செல்லப் பிராணிகளுக்கு இடமில்லையா? சிங்கப்பூரில் எதிர்ப்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள்: மன்னிப்பு கேட்டது நிர்வாகம்
சிங்கப்பூர்:
ஈஸ்ட் கோஸ்ட் (East Coast) பூங்காவில் அமைந்திருந்த Starbucks கடையில் இங்கு செல்லப்பிராணிகளை இடமில்லை என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.
மே 25ஆம் தேதி முதல் கடைக்கு உள்ளே, வெளியே இரு இடங்களிலும் செல்லப் பிராணிகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பு செல்லப்பிராணி வைத்திருப்பவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
முகநூலில் பகிரப்பட்ட அந்த அறிவிப்பு பல விமர்சனங்களைப் பெற்றது.
"இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஒருவர்.
"இனி சிங்கப்பூரில் இருக்கும் எந்த Starbucks கடைக்கும் செல்லப்போவதில்லை," என மற்றொருவர் கண்டித்தார்.
வழிகாட்டி நாய்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது Starbucks சிங்கப்பூர், செல்லப் பிராணிகள் கடைகளுக்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அறிவிப்பு ஏற்படுத்திய குழப்பத்திற்கு Starbucks மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
தற்போது கடையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செல்லப் பிராணிகள் தமது வளாகத்திற்குத் தொடர்ந்து வரவேற்கப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சொன்ன மோடியின் கருத்தால் இன்று மும்பை பங்கு சந்தை சரிந்தது
May 7, 2026, 10:52 am
உலக சந்தையை அதிரவைக்கும் மலேசிய நாணயத்தின் மீட்சி
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
