நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை

பாரிஸ்:

உலகப் புகழ்பெற்ற நெஸ்ட்லெ, டெனன் பால்மாவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் பொருள்களில் அண்மையில் நச்சு கண்டறியப்பட்டதும் அவற்றை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் தாமதம் காட்டியதாக பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஊடகங்கள்வ குற்றஞ்சாட்டியுள்ளன.

குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ‘செரியுலைட்’ (Cereulide) என்ற நச்சுப்பொருள் பால் மாவில் கலந்திருந்தது குறித்து ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு தாமதமாகத் தெரிவிக்கப்பட்டதாக ரேடியோ பிரான்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவின் ‘கேபியோ பையோடெக்’ என்ற நிறுவனத்திடம் பெறப்பட்ட மூலப்பொருளில் அந்த நச்சு கண்டுபிடிக்கப்பட்டது. நெஸ்ட்லெ, டெனன், லக்டாலிஸ் போன்ற மழலையர் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் அந்த மூலப்பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பல நாடுகளில் அந்நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பால்மாவு உணவுப் பொருள்கள் தற்போது மீட்கப்பட்டுவருகின்றன.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset