செய்திகள் மலேசியா
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகளுக்கு மரணத் தண்டனை தேவையில்லை.
போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தபோதிலும், மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சாத்தியத்தை அவர் நிராகரித்தார்.
கட்டாய மரண தண்டனையை அரசாங்கம் ரத்து செய்துவிட்டதால், இது குறித்துப் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, இது நாங்கள் பரிசீலிக்கும் ஒரு விஷயம் அல்ல என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் செயல்களால் மற்றொருவர் உயிரிழந்தால், அவர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கையாள்வதற்கு ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.
கடந்த மாதம், கிள்ளானில் மது, போதைப்பொருள் போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட ஒரு மோசமான விபத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கட்டாயப்படுத்தும் ஒரு சட்டத் திருத்தத்தை தனது அமைச்சு முன்மொழிந்ததாக லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
