நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா

கோலாலம்பூர்:

மிகவும் சிக்கலான அந்நியத்  தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை அரசாங்கம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் இதனை கூறினார்.

நாட்டின் அந்நியத் தொழிலாளர் மேலாண்மை முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

அந்த முறை மிகவும் சிக்கலானதாகும்.

அந்நியத் வெளிநாட்டுத்  பணியமர்த்தும் செயல் முறையானது.

காலப்போக்கில், அந்த அமைப்பை நிர்வகிப்பதற்காகபல அடுக்கு தனியார் ஒப்பந்தக்காரர்களை உள்ளடக்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இடைத்தரகர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது, செலவுகள் அதிகரித்துள்ளன.

மேலும் பொறுப்புகள் தெளிவற்றுப் போயுள்ளன.

எஞ்சி இருப்பது, அதன் அசல் நோக்கத்திலிருந்து மேலும் மேலும் தொடர்பற்றுப் போவது போல் தோன்றும் ஒரு கட்டமைப்பே.

இதைப் பற்றி முற்றிலும் பொருளாதார ரீதியாகப் பேசுவது எளிது.

மலேசியாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களின் அளவைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம்.

ஆனால் அந்த எண்கள் உண்மையான நிலையைச் சொல்லவில்லை.

இந்தப் பணப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டது.

மேலும் அந்தக் கட்டமைப்பு இன்னும் தேசிய நலனுக்குப் பயன்படுகிறதா என்பதே மிகவும் கடினமான கேள்வி என்று நூருல் இஸா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset