நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்

தாவாவ்: 

மானியம் பெற்ற 30 திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை அண்டை நாட்டிற்குக் கடத்த முயன்ற ஆடவர் ஒருவரை மலேசிய கடல்சார் அமலாக்க மையம் கைது செய்துள்ளது. 

காலை 6.20 மணியளவில், பத்து 3 படகுத்துறையிலிருந்து செபாத்திக் தீவை நோக்கிச் சென்ற ஒரு சரக்குப் படகு தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 36 வயதுடைய அந்த ஆண், ஓப் புளூட்டோ தீமூர், ஓப் திரிஸ் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டார்.

தாவாவ் கடல்சார் மண்டல இயக்குநர் கடல்சார் கேப்டன் அரிப்பின் கஜாலி, பத்து 3-க்கு தெற்கே 1.6 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்ட அந்தப் படகை ஆய்வு செய்ததில், எந்தவொரு சரியான அனுமதியும் இல்லாமல் 30 எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவை அண்டை நாட்டிற்குக் கடத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

1961ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், 2002 ஆம் ஆண்டின் சபா துறைமுகங்கள், படகுத்துறைகள் துறைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset