நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்

ஜார்ஜ்டவுன்: 

இங்குள்ள லெபு கிங் (Lebuh King) பகுதியில் வழக்கறிஞர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்த இரண்டு மாடி கடைவீடு ஒன்றில், இன்று திங்கட்கிழமை மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மதியம் 12.14 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் 20-க்கு 80 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தப் பழமையான கட்டிடத்தின் 70 விழுக்காடு பகுதிகள் தீயினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில், தற்போது வரை தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். உள்ளே சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நபர்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset