நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தாபாருவில் மாணவி மரணமடைந்த சோகம் ஒரு பாடமாக அமைய வேண்டும்; அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

கோத்தாபாருவில் பள்ளி மாணவி மரணமடைந்த சோகம் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கிளந்தான், கோத்தாபாருவில் உள்ள தஞ்சோங் மாஸ் தேசிய இடைநிலைப் பள்ளியின் பெண்கள் தொழுகைக்கூடத்தின் முன்பாக கார் மோதியதில் மாணவி ஒருவர் மரணமடைந்தார்.

மாணவியின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம், ஒவ்வொரு செயலிலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்கு அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இன்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம், அவர் காலஞ்சென்ற நூர் பாத்திமத்துல் ஹவா முகமது அஸாவுதீனின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset