நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்

புத்ராஜெயா:

சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் பீதியடைய வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

உலகளாவிய மோதலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு, பீதியையோ அல்லது அலட்சியத்தையோ ஏற்படுத்தாமல் மக்களைத் தயார்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறது.

தற்போதைய நிலையில், மக்களுக்குச் சொல்லப்படும் செய்தியானது யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது.

அதே நேரத்தில் அதீத கவலையை ஏற்படுத்தாத வகையிலும் சமநிலைப்படுத்துவதே மிகவும் கடினமான அணுகுமுறையாகும்.

மக்கள் பீதியான நிலையில் இருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.

அதே நேரத்தில் உலகளாவிய நிலைமை நாட்டைப் பாதிக்காது என்பது போன்ற ஒரு மறுப்பு மனப்பான்மை நிலவுவதையும் அது விரும்பவில்லை.

இங்கு பிரதான அரசாங்கத்திற்கான சவால் என்னவென்றால், துன்பம் வரப்போகிறது என்ற உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ள நாங்கள் அவர்களைத் தயார்படுத்த விரும்புகிறோம்.

ஆனால், மக்கள் பீதியடைவதை நாங்கள் விரும்பவில்லை.

அதே நேரத்தில், மக்கள் அலட்சியமாக இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை.

இன்று காலை, உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தையொட்டி ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset