நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான்:

தெலுக் இந்தான் 12ஆவது மைல் ஜாலான் பீடோர் சாலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா
கோலாகலமாக நடைபெற்றது

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின்  மகா கும்பாபிஷேக விழாவைக் காண பெரும் திரளான மக்கள் திரண்டிருந்தனர் .

இவ்விழாவிற்கு பேரா  மாநில ஆட்சிக் குழு டத்தோ அ. சிவநேசனை பிரதிநிதித்து மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் கலத்துக் கொண்டார்.

இவ்விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். சந்திரன்,

பேரா மாநிலத்தில் எதிர்நோக்கிய ஆலய நில விவகாரங்களுக்கு படிப்படியாக தீர்வுக்காணப்பட்டு வருகிறது.

இந்த ஆலய விவகாரங்களுக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

ஆக தொடர்ந்து ஆலய நிர்வாகங்கள் எதிர்காலத்தில. எந்தப் பிரச்சனைகள் இன்றி வழி நடத்த முறையே  சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆலயங்களை நிர்மாணிக்க அரசு  எந்த தடையும் விதிக்கவில்லை, அவைகளை நிர்மாணிக்க முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற  ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினர்களுக்கும்ஆலய நிர்வாகம் நன்றியைத்  தெரிவித்துக் கொண்டது.

-  பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset