செய்திகள் மலேசியா
மெங்குவாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது வழக்கு
ஈப்போ:
இந்த மாத தொடக்கத்தில் இங்குள்ள மெங்குவாங்கில், ஒரு கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆண்கள், இந்த திங்கட்கிழமை தெமர்லோ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.
பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஸுல்கிஃப்லீ நசீர், விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை ஐந்து கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
நான்கு சந்தேக நபர்கள் இன்னும் போலிஸ் காவலில் உள்ளனர், அதே சமயம் ஒருவர் உடல்நலக் காரணங்களுக்காக போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"முதல் கைது கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில், கோலாலம்பூர் மருத்துவமனையின் 4வது மாடி கரோனரி கேர் யூனிட் (CCU) வார்டில் செய்யப்பட்டது.
"இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கைதுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் 7 வரை, சந்தேக நபர்கள் பேரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் (IPD) சரணடைந்த பின்னர் செய்யப்பட்டன.
"ஐந்தாவது கைது ஏப்ரல் 8 ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு செய்யப்பட்டது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, அதே நாளில் சந்தேக நபர் போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
முதல் சந்தேக நபர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தடுப்பு காவல் விண்ணப்பத்திற்காக தெமர்லோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், மேலும் ஏப்ரல் 9 வரை ஐந்து நாட்கள் தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டதாக ஸுல்கிஃப்லீ கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் இரண்டு நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் போலிஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
"முதல் சந்தேக நபர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார், இரண்டாவது சந்தேக நபர் பிரிவு 352-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்.
"மூன்றாவது, நான்காவது , ஐந்தாவது சந்தேக நபர்கள் வழக்குத் தொடர்பு தரப்பு சாட்சிகளாக ஆக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
