நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெங்குவாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது வழக்கு

ஈப்போ: 

இந்த மாத தொடக்கத்தில் இங்குள்ள மெங்குவாங்கில், ஒரு கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆண்கள், இந்த திங்கட்கிழமை தெமர்லோ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.

பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஸுல்கிஃப்லீ நசீர், விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை ஐந்து கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நான்கு சந்தேக நபர்கள் இன்னும் போலிஸ் காவலில் உள்ளனர், அதே சமயம் ஒருவர் உடல்நலக் காரணங்களுக்காக போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

"முதல் கைது கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில், கோலாலம்பூர் மருத்துவமனையின் 4வது மாடி கரோனரி கேர் யூனிட் (CCU) வார்டில் செய்யப்பட்டது.

"இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கைதுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் 7 வரை, சந்தேக நபர்கள் பேரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் (IPD) சரணடைந்த பின்னர் செய்யப்பட்டன.

"ஐந்தாவது கைது ஏப்ரல் 8 ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு செய்யப்பட்டது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, அதே நாளில் சந்தேக நபர் போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

முதல் சந்தேக நபர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தடுப்பு காவல் விண்ணப்பத்திற்காக தெமர்லோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், மேலும் ஏப்ரல் 9 வரை ஐந்து நாட்கள் தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டதாக ஸுல்கிஃப்லீ கூறினார்.

விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் இரண்டு நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் போலிஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

"முதல் சந்தேக நபர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார், இரண்டாவது சந்தேக நபர் பிரிவு 352-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்.

"மூன்றாவது, நான்காவது , ஐந்தாவது சந்தேக நபர்கள் வழக்குத் தொடர்பு தரப்பு சாட்சிகளாக ஆக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset