செய்திகள் மலேசியா
எல்.ஆர்.டி ரயிலில் பாலியல் தொல்லை வழக்கில் வெளிநாட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
கோலாலம்பூர்:
சமீபத்தில் எல்.ஆர்.டி ரயிலில் நடந்த பாலியல் தொல்லை வழக்கில் சந்தேக நபர் ஒருவர், பிரசரானா உதவிப் போலிஸ் குழுவினரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 8 ஆம் தேதி ஒரு சாட்சி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில், 19 வயதுடைய அந்த வெளிநாட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என ரேபிட் ரெயில் தெரிவித்தது.
கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயிலில் ஒரு பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"ஆரம்பக் கட்ட விசாரணையில், புத்ராஜெயா பாதையில் உள்ள கூச்சாய் நிலையத்தில் நடந்த மற்றொரு பாலியல் தொல்லை வழக்கிலும் சந்தேக நபர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
"சந்தேக நபர், மேலதிக நடவடிக்கைக்காக ஸ்ரீ பெட்டாலிங் போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை செயல்முறைக்கு உதவும் வகையில், ரேபிட் ரெயில் அரச மலேசிய போலிஸாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்" என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ரேபிட் கேஎல் ரயில் சேவைகளின் ஆபரேட்டரான ரேபிட் ரெயில், எந்தவொரு பாலியல் தொல்லையையும் கண்டால் அல்லது அதற்கு ஆளானால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், அனைத்து பயனர்களும் நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது பணியில் உள்ள பிரசரானா உதவிப் போலிஸ் உறுப்பினர்களுக்கோ உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
