செய்திகள் இந்தியா
மதுபோதையில் நேர்ந்த விபரீதம்: ஆந்திராவில் குடும்பத் தகராறு காரணமாக மின்சாரக் கருவியால் காலை வெட்டிக்கொண்ட நபர்
மதனப்பள்ளி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் ஒருவர், தனது காலைத் தானே துண்டித்துக் கொண்ட கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலில் இருந்த அவர், மதுபோதையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட நபரின் மனைவி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவரைப் பிரிந்து வேறொருவருடன் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த அந்த நபர், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில், தனது விரக்தியை வெளிப்படுத்த மின்சாரக் கருவி ஒன்றைப் பயன்படுத்தித் தனது இடது காலைத் முழங்காலுக்குக் கீழ் அவரே துண்டித்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாகப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலிசார், குடும்பப் பிரச்சினைகளே இத்தகைய விபரீத முடிவுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
