செய்திகள் இந்தியா
இண்டிகோ விமானத்தை மோதிய கார்
கொல்கத்தா:
இந்தியாவின் கொல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் அனைத்துலக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ ஏ320 நியோ விமானத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமான நிறுத்துமிடத்தில் இருந்த மூன்றாம் தரப்பு ஆளில்லா வாகனம் ஒன்று நகர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது மோதியது.
அந்த விமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு முழுமையான ஆய்வுகள், தேவையான பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க நாங்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
