நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

"இறக்குமதிப் பொருட்களுக்குக் கூடுதல் விலை": கோலாலம்பூரில் மைடின் உரிமையாளர் விடுத்த முக்கிய எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா:

உலகளாவிய பொருளாதார நெருக்கடி, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 3% முதல் 10% வரை உயரும் அபாயம் உள்ளதாக  மைடின் (Mydin) நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அமீர் அலி மைடின் எச்சரித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற வணிகக் கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அவர், இந்த விலையேற்றம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அன்னியச் செலாவணி சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, சர்வதேச போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள்அத்தியாவசியப் பண்டங்களின் அடக்கவிலை உயர்ந்துள்ளது. இது சில்லறை விற்பனை விலையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விலை உயர்வு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே பணவீக்கத்தினால் மக்கள் தங்களின் செலவுகளைக் குறைத்து வரும் வேளையில், இந்தத் திடீர் விலையேற்றம் நுகர்வோர் மத்தியில் கூடுதல் சுமையை த விலையேற்றத்தைச் சமாளிக்க அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைஉருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்களை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் தங்களின் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும் இச்செய்தி வலியுறுத்துகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset