செய்திகள் உலகம்
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் 2 வாரம் போரை நிறுத்தி வைக்கிறேன்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உடனடி பதிலடித் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், போர் நீண்டுகொண்டுதான் இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுப்பப்படவிருந்த படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது இரு தரப்பிலுமான போர் நிறுத்தமாக இருக்கும். இதனைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கெனவே ஈரானுடனான நீண்டகால அமைதி, மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஓர் உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் கிட்டத்தட்ட முன்னேறிவிட்டோம். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்.
கடந்தகால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வார கால அவகாசம், ஒப்பந்தத்தை இறுதிசெய்ய நிறைவு செய்வதற்கு வழிவகுக்கும்.
அமெரிக்க அதிபராகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகால பிரச்னையின் தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது பெருமையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மூடிய ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறும் கூறிய டிரம்ப், இல்லையெனில் புதன்கிழமை அதிகாலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, முழுமையாக அழிய இருக்கிறது என்றும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை, உலக நாடுகளிடையே சற்று சலசலப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் ஈரான் அதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ஈரானின் தாக்குதலிலிருந்து பின்வாங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மீண்டுமொருமுறை டிரம்ப் அளித்த வாக்குறுதி காற்றில் கரைந்திருக்கிறது என்று சர்வதேச அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் மீது எதிர்பாராத திடீர் போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
