செய்திகள் உலகம்
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
நைஜீரியா:
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருமிப்பரவல் காங்கோ குடியரசையும் உகண்டாவையும் தாண்டி, ஆப்பிரிக்காவின் மேலும் பல நாடுகளைப் பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கென்யா (Kenya), ருவாண்டா (Rwanda), டான்ஸேனியா (Tanzania), தெற்குச் சூடான் (South Sudan) உட்பட 10 நாடுகள் அபாயத்தில் இருப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.
உகண்டாவில் மேலும் மூன்று பேருக்கு இபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
காங்கோ குடியரசில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் மூவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
வேகமாகப் பரவும் இபோலா தொற்றை உலகச் சுகாதார நிறுவனம் அனைத்துலக அவசரநிலையாக அண்மையில் அறிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
