செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் பதவி விலகினார்
புதுடெல்லி:
ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் (Campbell Wilson) பதவி விலகியுள்ளார்.
வில்சனின் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
பாதுகாப்புத் தொடர்பான சம்பவங்கள், செயல்பாடுகளில் இடையூறு ஆகியவற்றால் அண்மை மாதங்களில் நிறுவனம் மீதான நெருக்கடி அதிகரித்திருந்தது.
நியூஸிலந்தைச் சேர்ந்த வில்சன் 2022ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வந்தார்.
அவரது 5 ஆண்டு ஒப்பந்தம் நிறைவுபெறுவதற்கு முன்பே அவர் பதவி விலகி இருக்கிறார்.
ஏர் இந்தியா நிறுவனமோ டாடா (Tata) குழுமமோ அதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.
புதிய தலைவர் பொறுப்பேற்கும்வரை வில்சன் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு (2025) ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானது வில்சனின் பதவிக்காலத்தில் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது.
ஒருவர் தவிர விமானத்திலிருந்த 241 பேரும் உயிரிழந்தனர்.
"புது தில்லி - டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31 வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் இஸ்ரேலில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வெளியேற முடியாமல் அங்கு உள்ளனர். அவர்களை மீட்க ஒன்றிய அரசு எந்த ஏற்பாடும் முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அங்கு விமானத்தை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
