நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் இராணுவத்தால் லெபனானில் கொல்லப்பட்ட இந்தோனேசிய வீரர்கள் நல்லடக்கம்

ஜகர்த்தா: 

லெபனானில் பணியில் இருந்தபோது இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட இந்தோனேசிய அமைதிப்படை வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அந்த மூன்று வீரர்களும் சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் லெபனானில் பொதுமக்களை கொன்று வருகிறது. இந்த நிலையில் இந்தோனேசிய அமைதிப்படை வீரர்கள் மூவரை படுகொலை செய்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனப் படைகளின் பாதுகாப்புக் குறித்த கவலை தற்போது எழுந்துள்ளளது.

மாண்ட வீரர்களின் ஜனாஸா தொழுகையில் பொது மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை புரிந்தார்கள்.
அதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கலந்துகொண்டார்.

லெபனானின் தெற்குப் பகுதியில் சென்ற வாரம் நடந்த இரண்டு சம்பவங்களில் அவர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset