செய்திகள் இந்தியா
இஸ்ரேல் எங்கள் தந்தை நாடு என்று மோடி சொன்னதுபோல் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டிற்கு கொண்டுவர வேண்டாமா?: ஏர் இந்தியா முடிவால் பயணிகள் கவலை
டெல் அவிவ்:
அமெரிக்கா - ஈரான் போரால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது. அவ்வப்போது வான்வழி தாக்குதல்களும் பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், பல்வேறு நிறுவனங்களும் விமான சேவைகளை நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, "புது தில்லி - டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31 வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்றார்.
விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது, இஸ்ரேலில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள், தரைவழி எல்லைகள் வழியாக ஜோர்டான் அல்லது எகிப்து நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் நேரம் ஆவது மட்டுமின்றி, செலவும் அதிகரிக்கும். ஆபத்தான சூழலில் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ள ஏர் இந்தியா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இஸ்ரேல் எங்களது தந்தை நாடு என்று போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு மோடி நேரில் சென்று இஸ்ரேலை வாழ்த்திவிட்டு வந்ததுபோல் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்துவர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
