நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மேற்கு ஆசியா பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை

டோக்கியோ: 

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் அழுத்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால், மூல எண்ணெய் விலை அதிகமாகத் திறக்கப்பட்டது. அமெரிக்க பெஞ்ச்மார்க் மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) 1.86 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு AS$113.62 ஆக இருக்கிறது.

வட கடல் ப்ரெண்ட் மூல எண்ணெயும் இந்த வார சந்தை திறப்பில் 1.16 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு AS$110.30 ஆக இருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பாதையை மீண்டும் திறக்கவும் ஈரானுக்கு செவ்வாய்க்கிழமை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு சமூக ஊடகப் பதிவில், ஈரான் இணங்கத் தவறினால், அந்த நாட்டின் அணுமின் ஆலைகள், பாலங்கள் மீது தான் தாக்குதல் நடத்தப் போவதாக அவர் அச்சுறுத்தினார்.

"செவ்வாய்க்கிழமை ஈரானில் மின் உற்பத்தி நிலைய தினமாகவும், பாலங்களுக்கான தினமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும். இது போன்றது எதுவுமே இதற்கு முன் இருந்ததில்லை!!!" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். அதற்கு முன், திங்கட்கிழமை ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாகத் தான் உணர்வதாக அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இந்தப் போர் இப்போது ஆறாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இது மேற்கு ஆசியாவை மோதலில் ஆழ்த்தி உலகளாவிய பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.

உலகின் எண்ணெய், எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் கடந்து செல்லும் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. இது பெட்ரோலியத்தின் விலையை உயரச் செய்துள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset