செய்திகள் இந்தியா
ஐ.பி.எல் தொடருக்காக இந்தியா வந்த பிரிட்டிஷ் பொறியாளர் மரணம்: மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை
மும்பை:
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்(IPL) கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஒளிபரப்புப் பணிக்காக மும்பை வந்திருந்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், தங்கியிருந்த விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள புகழ்பெற்ற விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவரை, நீண்ட நேரமாகியும் காணாததால் விடுதி ஊழியர்கள் சோதனையிட்டபோது இச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உயிரிழந்த நபர் ஐ.பி.எல் தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்புத் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றி வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவரது உடலில் காயங்கள் ஏதும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இது தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையிலிருந்து சில மருந்துப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்தாருக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் ஒளிபரப்புக் குழுவினர், உடன் பணியாற்றியவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 5:33 pm
திருநங்கையர் விழிப்புணர்வு நாளில் அதிரடிப் போராட்டம்: புதிய சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு
April 1, 2026, 10:12 am
சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பல் பிடிபட்டது: 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது
March 31, 2026, 5:31 pm
கேரளாவில் அதிர்ச்சி: சிம் கார்டுகளைத் திருடி நூதனமாக வங்கிகளில் களவாடிய ஆடவர் கைது
March 31, 2026, 5:30 pm
ஆக்ராவில் பரபரப்பு: 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
March 31, 2026, 5:29 pm
விமான நிலையத்தில் நுழைந்த கரடி: கர்நாடக வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை
March 31, 2026, 5:28 pm
