நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தந்தையின் மீதான ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வீசிய ஓட்டுநர்: மும்பையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

மும்பை: 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நான்கு வயதுச் சிறுவனின் கால்களைப் பிடித்துத் தூக்கி, அவனது தலையைத் தரையில் பலமுறை மோதித் தாக்கியுள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட சிறு தகராறே இந்த வன்முறைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையும் அந்த ஆட்டோ ஓட்டுநரும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ஓட்டுநர் அருகில் இருந்த சிறுவனைத் தாக்கியுள்ளார். 

படுகாயமடைந்த அந்தச் சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்தக் கொடூரச் செயல் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். 

ஒரு பெரியவருக்கும் மற்றொருவருக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலில், பழிவாங்கும் நோக்கில் ஒரு பச்சிளம் குழந்தையை இலக்காக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset