செய்திகள் இந்தியா
திருநங்கையர் விழிப்புணர்வு நாளில் அதிரடிப் போராட்டம்: புதிய சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு
ஆக்ரா:
சர்வதேச திருநங்கையர் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள திருநங்கையர் சமூகத்தினர் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட மசோதாவிற்கு எதிராகத் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மசோதா தங்களின் அடிப்படை உரிமைகளையும் தனிப்பட்ட அடையாளத்தையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நூற்றுக்கணக்கான திருநங்கையர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் சுய அடையாளத்தை உறுதிப்படுத்தும் அதிகாரத்தைத் தற்போதைய மசோதா பறிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தங்களின் பாலின அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க வேண்டும் என்றும், கண்ணியமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யச் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆக்ராவின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்தப் பேரணியின் போது, சமத்துவத்தையும் நீதியையும் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த விழிப்புணர்வு நாள் வெறும் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு போராட்டக் களமாக மாற்றப்பட்டுள்ளதாகத் திருநங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
