செய்திகள் இந்தியா
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி: அரசுக்குக் கோரிக்கை விடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்
சத்ரபதி சம்பாஜிநகர்:
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து, ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்கள் இன்று பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை நிறுத்தி வைத்து ஓட்டுநர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
சில எரிபொருள் நிலையங்களில் 'இருப்பு இல்லை' என்ற பலகைகள் தொங்கவிடப்பட்டதால், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்தத் தட்டுப்பாட்டினால் தங்களின் வருமானம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தை நடத்தவே சிரமப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எரிபொருள் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இல்லையெனில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பள்ளி, அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நிலைமை சீராகும் வரை ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
