செய்திகள் இந்தியா
மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு: திருப்பதியில் பேருந்து ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை
விஜயவாடா:
ஆந்திர மாநிலம், திருப்பதி மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரை, அவருடன் பணிபுரிந்த கிளீனர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று நள்ளிரவு பேருந்து நிலைய வளாகத்தில் சங்கரும், கிளீனரான சுரேஷும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து சங்கரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பதி கிழக்கு காவல்துறையினர், சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சுரேஷைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுப் போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலாக நடந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:30 pm
ஆக்ராவில் பரபரப்பு: 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
March 31, 2026, 5:29 pm
விமான நிலையத்தில் நுழைந்த கரடி: கர்நாடக வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை
March 31, 2026, 3:58 pm
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கவுள்ளது
March 30, 2026, 5:39 pm
மும்பையில் இரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த உயிர் பலி
March 30, 2026, 5:38 pm
டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: சிலிண்டரால் அடித்து மனைவியைக் கொன்ற கணவன் கைது
March 30, 2026, 5:37 pm
விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி: துரிதமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த ஊழியர்கள்
March 30, 2026, 3:46 pm
கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் படுகொலை: கடற்படை அதிகாரி வீட்டில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவம்
March 29, 2026, 6:44 pm
திருப்பதி பயணத்தில் நேர்ந்த துயரம்: பேருந்து விபத்தில் 10 பேர் கருகிப் பலி
March 29, 2026, 6:43 pm
