செய்திகள் இந்தியா
டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: சிலிண்டரால் அடித்து மனைவியைக் கொன்ற கணவன் கைது
டெல்லி:
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை எரிவாயு சிலிண்டரால் அடித்துக் கொன்ற கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, பாலாம் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இந்தத் துயரமான கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து மனைவியின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவனைத் டெல்லி போலிசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்ததும், அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் டெல்லி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இக்கொலை தொடர்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்க தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தைச் சோதனையிட்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
